அமெரிக்க ஜனாதிபதி பைடன் 8 தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை நீக்கியுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு நாடுகளும் விமான பயண கட்டுப்பாடுகளை விதித்தன.

இந்நிலையில் அமெரிக்காவும் தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான பயண தடையை  விதித்தன.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மாளவி ஆகிய 8 தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை நீக்கியுள்ளார்.

இதனை வெள்ளை மாளிகை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.