தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் தப்பிக்குமா என தெரியவில்லை என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமிக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இதற்கிடையில், தற்போதுள்ள தடுப்பூசிகள் புதியவகை ஒமிக்ரான் ரக கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்குமா? என்பது குறித்து அந்தந்த தடுப்பூசி நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் தப்பிக்குமா? என தெரியவில்லை என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஒமிக்ரான் வைரஸ் தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து தப்பிக்குமா? என எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால், இந்த ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக 100 நாட்களில் புதிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து அனுப்புவோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.