சிக்பள்ளாப்பூரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி பின்னர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்பள்ளாப்பூர் பேரேசந்திரா பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது.இந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளிகள் கிடையாது என அறியமுடிகிறது இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மர்மநபர்கள் சிலர் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை வங்கி மேலாளர் மற்றும் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் பேரேசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்