ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்கள் தனியாக அவுஸ்திரேலியா வந்துள்ளனர் என அமைச்சர் கரென் அன்ரூஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நாங்கள் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைப்பதை பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு தனியாக வந்த சிறுவர்கள் உள்ளனர் அவர்களை நாங்கள் நன்கு கவனித்துக்கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலர் மேலும் வரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.