பெங்களூருவில், சொகுசு கார், மின்கம்பத்தில் மோதியதில், ஒசூர் தொகுதி எம்எல்ஏ., மகன் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் கோரமங்கலா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று, மின்கம்பத்தில் மோதியது.

இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் , ஒசூர் தொகுதி எம்எல்ஏ., பிரகாஷின் மகன் கருணாசாகரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மிகவும் விலை உயர்ந்த பாதுகாப்பான ஆடி காரில் அதிவேகமாக சென்ற இவர்கள் கட்டுபாட்டை இழந்த கார் நடைபாதையின் மீது ஏறியதால் விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. 

காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் ஏர் பேக் வேலை செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.