காபுல் விமானநிலைய தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் உடல்கள் அமெரிக்காவிற்கு எடுத்துவரப்பட்டதை தொடர்ந்து அவற்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பார்வையிட்டுள்ளார்.

டெலாவேரில் 13 அமெரிக்க படையினரினதும் உடல்கள் திருப்பி அனுப்பப்படும் இடத்திற்கு பைடன் சென்றுள்ளார்.

டோவர் விமானப்படை தளத்தில் அமெரிக்க படையினரின் உடல்கள் கௌரவமான முறையில் இடமாற்றப்படும் நிகழ்வில் பைடன் கலந்துகொண்டார் என தெரிவித்துள்ள கார்டியன் ஜனாதிபதியான பின்னர் பைடன் சந்தித்த மிகவும் துயரமான தருணமாக இது காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானில் மரணமடைந்த 13 வீரர்களின் குடு;ம்பத்தவர்களையும் நான் சந்தித்தேன் என பைடன் தெரிவித்துள்ளார்.