ஆப்கானிஸ்தானில், ஹிஜாப் அணியாததால் 21 வயது இளம் பெண்ணை தலிபான்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலிபான்களுக்கும் பாகிஸ்தான் அரசுப் படைகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆப்கனின் பல்வேறு மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், 21 இளம்பெண் ஒருவரை தலிபான்கள் கொன்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பால்க் மாவட்டத்திற்கு நஜானின் என்ற 21 வயது பெண் காரில் சென்றார்.
அவரை வழிமறித்த தலிபான்கள், ஹிஜாப் அணியாததற்காக கடத்திச் சென்று பின்னர் அவரை கொன்றுள்ளனர். 

தலிபான்களின் விதிபடி, பெண்கள் கல்வி கற்பதும் ஹிஜாப் அணியாமல் இருப்பது குற்றம். அதனாலேயே அந்தப் பெண்ணை அவர்கள் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆனால், தலிபான்கள் இதை மறுத்துள்ளனர்.