ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கனமழை கொட்டி தீர்த்தது.

ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில்  பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் முழ்கியும் கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உயிரிந்தோர் எண்ணிக்கை 120ஐ கடந்துள்ளது

கன மழை காரணமாக ஜெர்மனியில் சுமார் 1,300 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராணுவ படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்டை நாடான பெல்ஜியத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் பயணங்களை தவிர்க்குமாறு பெல்ஜியம் அரசு அறிவுறுத்தியுள்ளது.