தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகாலை முதல் ஆலயங்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. 35 நாட்களுக்குப் பிறகு ஆலயங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வருகைதந்துகொண்டு இருக்கின்றனர்.