அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இருப்பதை போலவே பாகிஸ்தான் அமெரிக்காவுடன் ஒரு நாகரிகம் மற்றும் சமமான உறவை நாடுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது இம்ரான்கான் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகிய போதிலும், இந்தியாவுடனான உறவை சீராக்க தான் மேற்கொண்ட முயற்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை எனவும் கூறியுள்ளார். துரதிருஷ்டவசமாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் போது ஏற்பட்ட உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், அதனை மீட்டெடுக்க விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார்.