இலங்கை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9வது நாடாளுமன்றத்தின் 5வது அமர்வு நாளை ஜனாதிபதி ரணிலின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

எதிர்வரும் 08 மற்றும் 09ம் திகதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அந்நாட்டு தலைவர்களுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் ஜனாதிபதி ரணில் உத்தேசித்துள்ளார்.