இலங்கை

இலங்கையினால் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது அந்த பகுதிக்குள் காணப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகின்றன.

சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு சொந்தமான தேர்ட் இன்ஸ்டியுட் ஒவ் ஓசோனோலஜியின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பலே, இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் காணப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து குறிப்பிட்ட கப்பல் மாலைதீவை நோக்கி சென்றது. இந்நிலையில் தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் - இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகின்றன.