இலங்கை

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது குறித்து அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராஜாங்க சுற்றுலா அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் தெரிவித்தாவது, இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றார்.

உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அதற்காக முன்னெடுக்கப்படும் முதலீடுகள் டொலரில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.