இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரவிக்குமார். அவர் சில வருடங்களுக்கு முன்பே சிவகார்த்திகேயனை வைத்து அயலான் திரைப்படத்தை இயக்கினார். சில காரணங்களால் நீண்ட தாமதத்துக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியாகி விமர்சன ரீதியாக ஒருபக்கம் நல்ல வரவேற்பை பெற்ற சூழலில் வசூல் ரீதியாகவும் அருமையான ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. படம் ரிலீஸான முதல் நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி அயலான் 75 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படமும் 80 கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.