பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது மாயா, அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, மணி மட்டும் தான் போட்டியாளர்களாக உள்ளனர்.

போட்டியாளர்கள் தவிர்த்து முன்னாள் போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் ஜோவிகாவோ, மாயா இல்லை என்றால் இந்த சீசன் சுத்த வேஸ்ட்டுனு ஒரே போடாக போட்டிருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம், அக்ஷயா, அனன்யா ராவ் ஆகிய தன் ஆதரவாளர்களிடம் மாயா கூறியதாவது...

எனக்கு ஜெயிக்கணும்னே இல்லை. சத்தியமா சொல்றேன். கன்ஃபெஷன் ரூமில் இருந்தபோது கூட சில் பண்ணி பாடிக்கிட்டு இருந்தேன். எனக்கு டென்ஷனே இல்லை. நான் அப்படியே கிளம்பினாலும் பிரச்சனை இல்லை. இன்று (நேற்று) நான் கிளம்பியிருந்தால் எனக்கு பிரச்சனையே இல்லை. நிஜமாவே உழைப்பு போட்டிருக்காங்க, எஃபோர்ட் போட்டிருக்காங்கல அவங்களுக்கு கொடுங்கயா டைட்டில.

எனக்கு கொடுக்க வேண்டாம். நான் எஃபோர்ட் போட்டிருக்கேனு சொல்லல. வேறு யாராச்சும் இருக்கலாம் என்றார்.

மாயா சொன்னதை கேட்டவர்களோ, அவரே டைட்டில் வேண்டாம் என சொல்லிட்டார் பிக் பாஸ். அதனால் மாயாவுக்கு டைட்டிலை கொடுத்து அவரை கஷ்டப்படுத்த வேண்டாம். என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.