ஆக்லாந்தில் உள்ள Matakatia Bay இல் நேற்றைய தினம் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று மாலை 6.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர்.

கடலோர காவல்படை, காவல்துறை மற்றும் பொலீஸ் ஈகிள் ஹெலிகாப்டர் அனைத்தும் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டன.

இந்நிலையில் அந்த நபரை உயிருடன் மீட்க முடியவில்லை.

இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்