கடும் போட்டிக்கு மத்தியில் அன்னபூரணி திரைப்படம் நேற்று அதிக திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் பாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார் ஆகியோர் அவர்களின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

நேற்று வெளியான அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம் முதல் நாளில் 1.5 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அளவில் 0.60 கோடியை தான் வசூலித்துள்ளது.

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,பலர் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால், வசூல் குறைந்து இருக்கலாம் என்றும் இனிவரும் நாட்களில் படம் கணிசமான வசூலை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.