நெல்சன் இயக்கத்தில் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது.

ஆனால், தற்போது டோலிவுட் மாஸ் ஹீரோவுடன் இணைய முடிவு செய்துள்ளாராம் நெல்சன்.

அதன்படி, புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், தனது அடுத்தப் படத்தில் நெல்சனுடன் இணையவுள்ளாராம்.

இந்தப் படம் 200 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அல்லு அர்ஜுனின் 23வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.