லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான இப்படம் சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அடித்து நொறுக்கியது.

இப்படத்தில் மன்சூர் அலி கான் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அவர் தான் படத்தின் பிளாஷ்பாக் கதையை கூறுவார். லோகேஷிற்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலி கான் என்பதால் அவருக்கு முக்கியமான ரோலை கொடுத்திருந்தார்.

 இந்நிலையில் சமீபத்தில் மன்சூர் அலி கான் த்ரிஷாவை பற்றி பேசிய விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு த்ரிஷாவே மன்சூர் அலி கானுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். மேலும் இனி அவர் நடிக்கும் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்றும் கூறினார் த்ரிஷா. இதையடுத்து லோகேஷ் உட்பட பலரும் மன்சூர் அலி கானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு மன்சூர் அலி கான் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நான் பேசியதை தவறாக கட் செய்து த்ரிஷாவிடம் காட்டிவிட்டார்கள் என்றும், நான் முழுமையாக என்ன பேசினேன் என்பதை த்ரிஷாவிடம் காட்டவில்லை என்றும் பேசினார் மன்சூர் அலி கான். மேலும் நான் எந்த ஹீரோயினிடமும் தவறாக இதுவரை பேசியதும் நடந்துகொண்டதும் கிடையாது என்ற மன்சூர் அலி கான், நான் தவறான நோக்கத்தில் இதனை பேசவில்லை என்றார்.

இதையடுத்து வேண்டுமென்றே இதுபோல செய்து எனக்கு பிரச்சனையை வரவழைக்க சிலர் இதை செய்கின்றனர் என மன்சூர் அலி கான் கூறினார். இந்நிலையில் லியோ படத்தில் நான் நடிச்சதே தப்பு. அதனால் தான் இவ்வளவு பிரச்சனைகளும். எங்கு போனாலும் லியோ லியோ என்று தான் என்னிடம் கேட்டு வந்தனர் என மிகவும் வருத்தமாக பேசினார் மன்சூர் அலி கான்.

இருந்தாலும் இதற்கெல்லாம் நான் பயப்படுற ஆள் கிடையாது. இதுபோல என் திரைவாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளேன் என்றும் பேசினார் மன்சூர். இந்நிலையில் தற்போது மன்சூர் அலி கான் பேசிய விஷயம் தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.