இலங்கை

இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட் கணினிகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் முதல் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2012 ஆம் ஆண்டு இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.