இலங்கை

ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கையை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி இந்த டெண்டர் அழைப்புப் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.