நடிகர் சிவராஜ்குமார் கன்னடத்தில் ஆனந்த் என்ற படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மூத்த மகன் என்ற அடையாளம் இருந்தபோதிலும் தன்னுடைய சிறப்பான திறமையால் இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். கன்னடத்தில் மட்டுமில்லாமல் தற்போது தமிழ், மலையாளப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஜெயிலர் படத்தில் இவரது மாஸான நடிப்பு கன்னட ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் மிரட்டலான சிவராஜ்குமாரை பார்க்க முடிந்தது.

இதனிடையே தமிழில் அதிகமான பேட்டிகளை கொடுத்துவரும் சிவராஜ்குமார், தான் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வருவதாகவும் திடீரென சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிய கடையில் சாப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார். அப்படி சாப்பிடும்போது ரசிகர்களின் தொந்தரவு இருக்கும் என்று கூறியுள்ள அவர் ஆனால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். ரசிகர்களின் அந்த தொந்தரவில் பெருமை, சந்தோஷம், திமிர் இவற்றை தான் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.