நேபாள விமான விபத்தில் உயிரிழந்த விமானத்தின் துணை பைலட்டின் கணவரும், முன்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.

துணை பைலட்டின் கணவரான தீபக் பொக்ரேல் 2006 ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

அவர் இறந்து 4 வருடங்களுக்குப் பிறகு 2010ம் ஆண்டு அவரது மனைவி அஞ்சு கதிவாடா நேபாள் ஏர்லைன்சில் இணைந்துள்ளார்.

44 வயதான கதிவாடா, தற்போது விபத்திற்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தில் துணை பைலட்டாக இருந்துள்ளார்.

தீபக் இறந்த பிறகு வந்த இன்சூரன்ஸ் பணத்தை வைத்துத் தான் அவரது மனைவி கத்திவாடா பைலட் பயிற்சி பெற்றுள்ளார்.

எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் கமலுடைய உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கதிவாடாவின் உடல் முழுமையாக இன்னும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.