குடிமை உரிமைகள் பறிக்கப்பட்ட அனுபவம் எங்களுக்கு உள்ளது. சிவில் உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளை இழக்க நாங்கள் பயப்படவில்லை. கடந்த காலங்களில் அதை எதிர்கொண்டோம்.
நாட்டில் ஊழலை எதிர்த்து மக்கள் 2015 இல் வாக்களித்தனர். ஆட்சிக்கு வருவதற்கு நாம் காத்திருக்க முடியாது .நாம் ஆணைப்படி செயல்பட்டோம். நல்லாட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒரு நாள் மட்டுமே கூடியது.
ஆனால் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு பழிவாங்கும் கருத்தை உருவாக்கியுள்ளது. அது ஒரு உண்மை.
தொடர்புடைய ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாகும்.
எதிர்க்கட்சியை அடக்கி ஒரு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியாக இது இருந்தால், மக்கள் அதை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று தெரிவித்தார்.