ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனவிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி ,சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியை எவ்வாறு வலுப்பெற செய்வது குறித்தும், மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்வாங்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.