இந்த நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டாம் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க ஐக்கியமக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி ,இந்த தருணத்தில் ஆட்சியை கைப்பற்ற நினைப்பது பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் எதிர்கட்சி ஆட்சியை கைப்பற்றினால் அடுத்த பத்து வருடத்திற்கு அதிகாரத்திலிருப்பது குறித்த எண்ணத்தை எதிர்கட்சி கைவிடவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.