அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் குரல் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி ,தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பிலும், தடுப்புக்காவலில் உள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பிலும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் ,இந்நிலையில், அதற்கு இணையாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும், தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.