பாராளுமன்ற உறுப்பினறும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினரான முஷாரப் முதுநபீன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்....
"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது"
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றி தெரிவித்துள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால், அதன் பாவத்தை கர்தினலே ஏற்க வேண்டும்.
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.