கிழக்கு மாகாணத்தில் 4 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரைமூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை கல்வி வலயம் மற்றும் மஹஒய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.