இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 997 பேரில் 173 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி ,கம்பஹா மாவட்டத்தில் 170 பேர் , காலி மாவட்டத்தில் 92 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 86 பேர், மாத்தளை மாவட்டத்தில் 66 பேர், களுத்துறை மாவட்டத்தில் 74 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 59 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 49 பேர், மாத்தளை மாவட்டத்தில் 32 பேர், பதுளை மாவட்டத்தில் 25 பேர், புத்தளம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 பேர், கேகாலை மாவட்டத்தில் 16 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 15 பேர், வவுனியா மாவட்டத்தில் 11 பேர், அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் 07 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 பேர், மன்னார் மாவட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.