கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தியுள்ள அவர், கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.