இங்கிலாந்து நாடாளுமன்றில்  27 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த தெரசா மே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.

மேலும் கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து பெர்க்ஷைர் தொகுதியின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோடு, 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் அடுத்த பொது தேர்தலில் தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள மெய்டன்ஹெட் தொகுதியில் இருந்து போட்டியிடுவதில்லை என்ற கடிமான முடிவை எடுத்துள்ளாக தெரிவித்துள்ளார்.