இலங்கை

மாலைதீவிலிருந்து சில்வர் மூன் என்ற சொகுசு பயணிகள் கப்பலொன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பஹாமாஸ் கொடியுடன் வருகைத்தந்த இந்த கப்பலில் 516 சுற்றுலாப் பயணிகளும் 400 ஊழியர்களுக்கு வருகை தந்துள்ளனர். சொகுசு கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, காலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சில்வர் மூன் பயணிகள் கப்பல் இன்று பிற்பகல் மீண்டும் மாலைதீவு நோக்கிப் புறப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.