இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 12 நாள் வெளிநாட்டு பயணம் முடிவடைந்ததையடுத்து நாடு திரும்பியுள்ளார்.

அவர் இன்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 12 நாட்களாக சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற பொருளாதார மாநாடு, உகண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு மற்றும் தென் சீன உச்சி மாநாட்டின் மூன்றாவது உச்சி மாநாடு ஆகியவற்றில் ஜனாதிபதி ரணில் கலந்து கொண்டார்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் டுபாயில் இருந்து இன்று காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை குழுவினர் வந்தடைந்துள்ளனர்.