இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று உகண்டாவின் கம்பால நகரை சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

19வது அணிசேரா இயக்கத்தின் (NAM) உச்சி மாநாட்டிலும், 77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காக உகாண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளார்.

உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.