பிக் பாஸ் சீசன் 7 தற்போது 70 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் தற்போது மாயா மற்றும் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் புலம்புவதை பார்த்து பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்கள் கர்மா யாரை விட்டது என கூறி வருகின்றனர். விஷ்ணு பூர்ணிமாவை பற்றி பின்புறம் பேசியதாக விஜய் வர்மா கூறினார். இதனால் பூர்ணிமா, விஷ்ணு இப்படி செய்வார் என நான் நினைக்கவே இல்லை என மாயாவிடம் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து பூர்ணிமாவிடம், துரோகம் செய்துவிட்டு அவரே நிம்மதியாக தூங்குகிறார். நீங்க ஏன் அழுகுறீங்க. விடுங்க பார்த்துக்கலாம். நமக்காக விஜய் வர்மா இருக்கின்றார் என ஆறுதலாக மாயா பேசினார். மேலும் இருவரும் தனியாக இருந்து புலம்பி வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள், பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பிவிட்டு சந்தோஷமாக இருந்தீர்கள்.

அப்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும். கர்மா யாரையும் சும்மா விடாது என கூறி வருகின்றனர். சமீபகாலமாக விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் மாயா மற்றும் பூர்ணிமாவின் டீமை வெளுத்து வாங்கி வருகின்றனர். மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு பதிலடி தந்து வருவதால் ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு ஆதரவு தருகின்றனர்.