நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவரது 50 ஆவது படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் 51 ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். தொடர்ந்து பாலிவுட்டிலும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்கத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் சொந்தக்காரர் மகன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தனுஷும் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் இயக்குநராக களமிறங்கவுள்ளார்.

விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் தற்போது இந்தப் படத்தை உறுதி செய்துள்ளார்.

இந்தப் படம் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள ஜிவி பிரகாஷ், தனுஷ் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் தான் இசையமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கோபுரம் பிலிம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என சுற்றி சுற்றி நடித்து வருகிறார் தனுஷ். சினிமாவில் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார் தனுஷ்.