இந்தியா: தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் மீனவர்கள் மத்தியில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து அடுத்த மாதம் 18 ஆம் திகதி ராமநாதபுரத்தில் மீனவர் சங்க மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மீனவர் சங்க பிரதிநிதிகளின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 18ல் நடக்கும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.