இந்தியா: தமிழ்நாடு 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கழக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக திருச்சிக்கு வந்தார்.

இதன்போது திருச்சியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...

யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்குத் தெரியும். அ.தி.மு.க. தான் பா.ஜ.க.விற்கு அடிமையாக உள்ளது. எங்களுடைய தலைவர் கலைஞரும், இன்றைய தலைவர் ஸ்டாலினும் யாருக்கும் அடிமையாக இல்லை. யாருக்கும் பயந்ததும் இல்லை. தமிழக கவர்னருக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால் அடிக்கடி டெல்லிக்கு சென்று வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரில் இருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்திடம் பேசி தமிழ்நாட்டுக்கு தண்ணீரை பெற்றுத் தர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என அவர் கூறினார்.