இந்தியா: தமிழ்நாடு 

அதிமுக - பாஜக இடையேயான மோதல் விவகாரம் சற்று தணிந்துள்ள நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:- மறைந்த தலைவரை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை கருத்து அமைந்ததற்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. ஊடகங்கள் முன்னாடி கண்டனத்தை தெரிவித்தோம். அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானமும் போடப்பட்டது. அதன்பிறகு அண்ணாமலை ஜெயலலிதாவை புகழந்து பேசினார். ஜெயலலிதாவை மதிக்கிறேன்.அவரை போல பெரும் தலைவர் வரமுடியாது. அவரது வழியை பின்பற்ற வேண்டும். 5 நிமிடம் ஜெயலலிதாவை புகழ்ந்து பேட்டி கொடுத்தார். அதன் சாராம்சம் என்ன? அண்ணாமலை உணர்ந்து விட்டார். தவறை திருத்திக் கொண்டுள்ளார். எனவே, இனிமேல் கட்சியை பற்றியோ எங்களை பற்றியோ அது போன்ற விமர்சனங்கள் வராது என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.