இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் தான் வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில்  கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களே இருந்த நிலையில் சமிந்த வாஸ், இராஜினாமா கடிதத்தை கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் செயற்பட்டமை வருத்தத்துக்கு உரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், ஊதியம் தொடர்பான பிரச்சினை இங்கு இல்லை என்றும் அவர் கூறினார்.