வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படம் பெப்ரவரி 17ம் திகதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் தனுஷ் சொன்ன ஒரு விஷயத்தை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

தனுஷ் கூறியதாவது, வாத்தி படம் 90களில் நடப்பது போன்று இருக்கும். அந்த படத்தில் நடித்தபோது தான் ஆசிரியர் வேலை எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொண்டேன்.

நம் தலையெழுத்தை மாற்றுபவர்கள் ஆசிரியர்கள். லாக்டவுன் நேரத்தில் தான் வெங்கி என்னை தொடர்பு கொண்டு கதை சொன்னார். நான் அப்பொழுது வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தேன் என்றார்.

தனுஷ் மேலும் கூறியதாவது, வெங்கி சொல்ல வரும் கதையை எப்படியாவது மறுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் கதையை கேட்டதுமே பிடித்துவிட்டது. வேறு எதுவும் பேசாமல், எப்போ டேட்ஸ் வேண்டும் என்று மட்டும் கேட்டேன்.

இந்த வாத்தி படத்தை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். படிப்பு என்பது பிரசாதம் போன்று. அதை 5 ஸ்டார் ஹோட்டலில் விற்பனை செய்யாதீர்கள் என்பதே வாத்தி படத்தின் கதை ஆகும் என்றார்.