Whangārei இல் உள்ள Ruakākā ஆற்றில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9.10 மணியளவில் பொதுமக்களால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சடலத்தை அடையாளம் காணும் வரை மேலதிக விவரங்களை வழங்க முடியாது என்று பொலிஸார் கூறுகின்றனர்.