கிறிஸ்ட்சர்ச் புறநகர் பகுதியான Bryndwr நேற்றைய தினம் இடம்பெற்ற ஒரு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

நேற்று மாலை 6.20 மணியளவில் Eden Place என்ற இடத்தில் ஒரு வீட்டிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

இந்நிலையில் சம்பவ இடத்தில் ஒருவர் இறந்து கிடந்ததுடன் காயமடைந்த இரண்டாவது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய கரணங்களை கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

காட்சி ஆய்வு நடைபெற்று வருகின்ற நிலையில் பொலிஸார் கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான எதையும் பார்த்தவர்கள் அல்லது சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.