ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி நியூசிலாந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று மேற்கு ஆஸ்திரியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான பனிச்சரிவுகளில் மூவர் உயிரிழந்த நிலையில் அவர்களில் ஒரு இளைஞனும் அடங்குவதாக ஆஸ்திரியா பிரஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உள்ளூர் பொலிஸாரின் தகவல்படி, கல்டென்பாக் பனிச்சரிவில் இறந்தவர் 17 வயதான நியூசிலாந்து சுற்றுலாப் பயணி என கூறப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.