கடந்த புதன்கிழமை Coromandel Peninsula வில் உள்ள Whangamatā என்ற இடத்திற்கு அருகில் உள்ள Opoutere கடற்கரையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன்‌ ஒருவர் காணாமல் போனார்.

இதனையடுத்து காணாமல் போன நபரை தேடும் பணிகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் குறித்த பகுதியில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் காணாமல் போன நபருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் காணாமல் போனவர் ஒரு இளைஞன் என நம்பப்படுவதாகவும், இன்று மீட்கப்பட்ட சடலம் ஒரு வயது வந்த ஆண் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.