ஈழத்து TMS என புகழ் கொண்ட பாடகர் N. ரகுநாதன் அவர்கள் நம் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்.

இலங்கையில் மெல்லிசை துறையில் இவரது ஈடுபாடு அளப்பரியது.

வானொலிகளிலும் சரி மேடை நிகழ்ச்சிகளிலும் சரி இவர் தொடர்ந்து இசைத்து வருகின்றார்.

இவர் மானிப்பாய் வைரவர் ஆலயத்துக்கு “ஆனந்த இசைமாலை” எனும் பாடல் கோர்வையை வெளியிட்டுள்ளதுடன் மாத்தளை அம்மன் கோவிலுக்காக எம் எஸ் செல்வராஜாவின் இசையில் இவர் பாடிய “மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும் உன் புகழ் பாடுதம்மா” என்ற பாடல் இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்த பாடலாகும்.

தென்னிந்திய பிரபல பாடகர்களான சுசிலா, ஜிக்கி, சௌந்தராஜன், ஜானகி, யமுனா ராணி, எல் ஆர் ஈஸ்வரி, வாணிஜெயராம் முதல் அனைவருடனும் மேடை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார்.

இந்தியா முதல் அணைத்தது மேலை நாடுகளுக்கும் இசை நிகழ்வுக்காக இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வாழ் நாள் சாதனையாளர் என்ற கெளரவத்தை பிரித்தானியா வாழ் கலைஞர்கள் குழாம் வழங்கி கௌரவித்துள்ளது.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 11 ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.