அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடல் ஆமையைப் பிடித்து கொலை செய்து இறைச்சியாக்கி உடைமையில் வைத்திருந்த குற்றத்துக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 ஊர்காவற்றுறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கரம்பொன் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண் டுள்ளனர்.