மீகொட, தெதிகமுவ பிரதேசத்தில் 204  கிராம் ஹெரோயின் மற்றும் 520 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண (தெற்கு) குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹன்வெல்லவில் கடை உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் அவர் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தெடிகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.

குறித்த பெண் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.