இம்மாதம் முதல் ஏழு நாட்களில் இலங்கைக்கு 20,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையின் வேகத்தை இது தொடர்கிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் தற்காலிக தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 7 ஆம் திகதிக்கு இடையில் 20,875 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

கடந்தாண்டு இதே காலப் பகுதியுடன் ஒப்பிடும் போது வருகை 1.6 சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 7 வரை மொத்தம் 20,544 வெளிநாட்டு பார்வையாளர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர், அந்த வருகையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ரஷ்ய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இதைப் போலவே, 2023 ஜனவரி முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மை ஆதாரமாக ரஷ்ய கூட்டமைப்பு உள்ளது, இது அனைத்து வருகைகளில் 28% பங்களிப்பை வழங்கியது. 

மொத்த சுற்றுலாப் பயணிகளில் 11% பங்கைக் கொண்ட இந்தியா இரண்டாவது இடத்தையும், அனைத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 7% பங்களித்த இங்கிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஜனவரி 2023 இன் முதல் வாரத்தில் சராசரி நாளாந்த வருகை 2,982 ஆக இருந்தது, 2022 இல் இதே காலக்கட்டத்தில் 2,934 ஆக இருந்தது.

 2022 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் (டிசம்பர் 25–31) வருகையுடன் ஒப்பிடும் போது சராசரி நாளாந்த வருகையில் 22 சதவீதம் குறைந்துள்ளது.